ADDED : நவ 15, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு பெண் வழக்கறிஞர்கள் சங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் 39 வது மூன்று நாள் தேசிய புத்தகக் கண்காட்சி துவங்கியது.
சங்கத் தலைவர் ஆனந்தவள்ளி தலைமை வகித்தார். பொது செயலாளர் கிருஷ்ணவேணி வரவேற்றார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திறந்து வைத்தார். வழக்கறிஞர்கள் சாமிதுரை, கருணாநிதி, ஜெய இந்திராபடேல், ஜெயந்தி, சிவசங்கரி, மரிய வினோலா பங்கேற்றனர்.