ADDED : ஏப் 11, 2025 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மதுரை மையம் சார்பில் தேசிய நிலஅளவை தினவிழா நடந்தது. மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் முத்துமுனியாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ரகுபதி, துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் பேசினர். ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
நிலஅளவையர்களுக்கு நீதிமன்ற நிர்வாக பயிற்சி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓய்வு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி, செயலாளர் மணவாளன், ஜெயராஜ் பங்கேற்றனர். நிர்வாகி மணிரத்தினம் நன்றி கூறினார்.

