ADDED : நவ 01, 2025 03:04 AM
அ நிறம் | அளவு
மதுரை: சர்தார் வல்லபாய் பட்டேலின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் தேச ஒற்றுமை தினம், தொழில் முனைவோர் பயிற்சி நடந்தது.
கல்வி அலுவலர் நடராஜன் வரவேற்றார். செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். தட்சிண பாரத் ஹிந்தி பிரச்சார சபை ஆசிரியை ஸ்ரீமதி உமா முனிஸ், அன்னை தெரசா மகளிர் பல்கலை வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை புஷ்பம், பட்டிமன்ற பேச்சாளர் சித்ரா கணபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
மாணவிகளுக்கு குறுந்தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
