sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குறைதீர் கூட்டத்தில் இயற்கை சந்தை

/

குறைதீர் கூட்டத்தில் இயற்கை சந்தை

குறைதீர் கூட்டத்தில் இயற்கை சந்தை

குறைதீர் கூட்டத்தில் இயற்கை சந்தை


ADDED : ஆக 12, 2025 05:50 AM

Google News

ADDED : ஆக 12, 2025 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டம் துவங்கும் முன்பாக, மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் மாவட்ட அளவிலான இயற்கை சந்தை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரம்புக்கூடைகள், சணல் தயாரிப்புகள், கைவினைப் பொருட்கள், பழங்கள், ஊறுகாய் உட்பட தங்கள் உற்பத்திப் பொருட்களை 23 ஸ்டால்களில் காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.

அதனை கலெக்டர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் திட்ட இணை இயக்குனர் தமிழரசி, உதவி திட்ட அலுவலர் ஜெயராஜ் பங்கேற்றனர்.

பின்னர் நடந்த குறைதீர் கூட்டத்தில் வலைசேரிபட்டி சரவணன் அளித்த மனுவில், ''மாவட்டத்தின் 420 ஊராட்சிகளிலும் நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைப்பயன்படுத்தி ஒன்றியங்களில் தலா 2 கிராமங்களை தேர்வு செய்து அகற்றி வருகின்றனர். அதேபோல நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us