/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நவராத்திரி விடுமுறை கால சிறப்பு ரயில்கள்
/
நவராத்திரி விடுமுறை கால சிறப்பு ரயில்கள்
ADDED : அக் 06, 2024 03:53 AM
மதுரை : நவராத்திரி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை -- துாத்துக்குடி, சென்னை -- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
சென்னை சென்ட்ரல் -- துாத்துக்குடி சிறப்பு ரயில் (06186) அக். 8 சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11:35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1:50 மணிக்கு துாத்துக்குடி சென்றடையும்.மறு மார்க்கத்தில் துாத்துக்குடி -- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06187) துாத்துக்குடியில் இருந்து அக். 10 மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:55 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இந்த ரயில்கள் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன்களில் நிற்கும்.
இதில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் -- நாகர்கோவில் இடையே ஒரு குளிர்சாதன சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து (06178) அக்.9 இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:50 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.மறு மார்க்கத்தில் (06179) நாகர்கோவிலில் இருந்து அக். 10 இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:25 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ரயில்வே ஸ்டேஷன்களில் நிற்கும்.
இதில் 15 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு சரக்குப்பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.