ADDED : நவ 15, 2025 04:51 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி சிறப்பு கவுன்சிலர்கள் கூட்டம் துணைத்தலைவர் தேன்மொழி தலைமையில் நடந்தது. கமிஷனர் இளவரசு, கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி நகராட்சி வசம் ஒப்படைத்த சந்தைத் திடலில் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மழைநீர் கால்வாய்களை சீரமைக்க பணியாளர் பற்றாக்குறையை சரி செய்து, மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட 37 தீர்மானங்களை நிறைவேற்றினர்.
ஒன்றிய நிர்வாகம் நகராட்சி வசம் ஒப்படைத்த 7 ஏக்கர் 85 சென்ட் இடத்தில் உள்ள 300 க்கும் அதிகமான கடைகள், தரை வாடகை கடைகளிடம் நகராட்சி பணியாளர்கள் மூலம் வாடகை வசூல் செய்யும் தீர்மானத்தை ஒத்தி வைத்துவிட்டு, புதிய வணிக வளாக கட்டடங்களைக் கட்டி, ஏற்கனவே வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து முறையாக ஏலம் நடத்தி வாடகை வசூல் செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

