தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இரவு நேர பஸ் இன்றி தவிப்பு

இரவு நேர பஸ் இன்றி தவிப்பு

இரவு நேர பஸ் இன்றி தவிப்பு


ADDED : ஆக 28, 2025 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2025 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்,: டி.கல்லுப்பட்டியில் இருந்து பேரையூருக்கு இரவு 10.30 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லாததால் மக்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

பேரையூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். பணி முடிந்து திரும்பிச் செல்ல டி.கல்லுப்பட்டி வரை இரவு முழுவதும் பஸ் வசதி உள்ளது. ஆனால் டி.கல்லுப்பட்டியில் இருந்து பேரையூருக்கு இரவு 10:30 மணிக்கு கடைசி பஸ் இயக்கப்படுகிறது. இதனால் ஊழியர்கள், பொதுமக்கள் பேரையூருக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

பேரையூரைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் இரவில் பஸ் இல்லாமல் தவிக்கின்றனர். கூடுதல் பணம் செலவு செய்து ஆட்டோவில் செல்லும் அவல நிலை உள்ளது. எனவே இரவில் பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us