/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையிலிருந்து இரவு நேர விமான சேவை துவக்கம்
/
மதுரையிலிருந்து இரவு நேர விமான சேவை துவக்கம்
ADDED : டிச 21, 2024 08:07 AM

அவனியாபுரம், : மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு நேற்று முதல் இரவு நேர விமான சேவை துவங்கியது.
விமான நிலையத்தில் அக்., 1 முதல் 24 மணி நேரமும் விமானங்கள் வந்து செல்ல அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இண்டிகோ விமானம் நேற்று முதல் இரவு நேர சேவையை துவக்கியது.
இயக்குனர் முத்துக்குமார், பொது மேலாளர் ஜானகிராமன், இண்டிகோ விமான நிறுவன மேலாளர் மோகனா ஆனந்த், பணியாளர்கள் கேக் வெட்டி இரவு நேர சேவையை துவக்கினர். சென்னையிலிருந்து 78 பயணிகளுடன் மதுரை வந்த இரவுநேர இண்டிகோ விமானம் மதுரையிலிருந்து 43 பயணிகளுடன் நேற்றிரவு 10:45 மணிக்கு சென்னை சென்றது.
இதுவரை சென்னைக்கு தினம் இரவு 9:05 மணிக்கு கடைசி விமானம் சென்றது.
இனி தினமும் இரவு 10:45 மணிக்கு மதுரையிலிருந்து இரவு நேர சேவையாக இண்டிகோ விமானம் புறப்பட்டு செல்லும்.

