ADDED : ஜூலை 21, 2025 03:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: திருவாதவூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த வடமாடு மஞ்சுவிரட்டை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் பகுதியில் இருந்து கலந்து கொண்ட காளைகளை அடக்கியதில் 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. மேலுாரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். போட்டியை திருவாதவூர் திரவுபதி அம்மன் குழு மற்றும் இளைஞர்கள் ஏற்பாடு செய்தனர்.