/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொள்முதல் மையங்களில் வடமாநில தொழிலாளர்கள்
/
கொள்முதல் மையங்களில் வடமாநில தொழிலாளர்கள்
ADDED : டிச 03, 2024 05:57 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி பகுதி நெல் கொள்முதல் மையங்களில் வட மாநில தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கட்டுமானம், பனியன் தொழிற்சாலை, துணிக்கடை, மால், ஓட்டல்களில் கால்பதித்த வட மாநில தொழிலாளர்கள் தற்போது விவசாயப் பணிகளிலும் ஈடுபட துவங்கியுள்ளனர். தஞ்சை, திருப்பூர் பகுதிகளில் நெல் நாற்று நடவு, களை எடுப்பது, உரமிடுவது, போன்ற பணிகளை செய்து வந்தனர்.
நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தால் விவசாய பணிகளுக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை.
நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல்லை அள்ளி இயந்திரம் மூலம் துரற்றி, மூடைகளில் கட்டும் பணிகளுக்கு உரிய நேரத்தில் ஆட்கள் கிடைக்காததால் பணிகள் முடங்குகிறது.
மழை நேரங்களில் மூடைகளையும், நெல்லையும் பாதுகாக்க விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் இப்பணியில் வாடிப்பட்டி பகுதியில் பீஹார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.