sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அவமதிப்பு வழக்கில் ஆஜராக நோட்டீஸ்

/

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அவமதிப்பு வழக்கில் ஆஜராக நோட்டீஸ்

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அவமதிப்பு வழக்கில் ஆஜராக நோட்டீஸ்

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அவமதிப்பு வழக்கில் ஆஜராக நோட்டீஸ்


ADDED : அக் 04, 2024 07:16 AM

Google News

ADDED : அக் 04, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2021 முதல் பணிபுரிந்த அறநிலையத்துறை இணைக் கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இதற்கு சொந்தமாக கத்தப்பாறை, அதுார் பகுதியில் உள்ள நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.

2019 அக்.,23 ல் நீதிபதிகள் அமர்வு,'நிலத்தை மீட்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நில விவகாரத்தில், கீழமை நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம். ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் பாதிக்கப்படுவதாக கருதுவோர், ஆட்சேபனை இருப்பின் உரிய அதிகாரிகளிடம் நிவாரணம் தேடலாம்,' என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் அறநிலையத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. சரியாக அரசு தரப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அதிருப்தியை நீதிபதிகள் வெளியிட்டனர்.

நீதிபதிகள்: இக்கோயிலில் 2021 முதல் இணைக் கமிஷனர், செயல் அலுவலர், உதவி கமிஷனர்களாக பதவி வகித்தவர்கள் அக்.30 ல் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us