ADDED : அக் 11, 2024 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உலக பார்வை தினத்தை முன்னிட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.
டி.ஆர்.ஓ., சக்திவேல் தொடங்கி வைத்தார். மதிச்சியம் இன்ஸ்பெக்டர் விமலா, டாக்டர்கள் ரவீந்திரன், உஷா, கிருஷ்ணதாஸ், ெஷட்டி பங்கேற்றனர். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 1500 மாணவர்கள் கண்காட்சியை பார்த்து பயனடைந்தனர். நிர்வாகிகள் ராமநாதன், சரவணன், மீனாட்சி சுந்தரம், பேகம், லட்சுமி ஏற்பாடுகளை செய்தனர். செவிலியர்களின் விழிப்புணர்வு மனிதசங்கிலி நடந்தது.

