நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை,: மதுரையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில் சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் கிழக்கு ஒன்றியம் சக்கிமங்கலம் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் தொடர்பான அதிகாரிகள் களஆய்வு நடந்தது.
இதில் இடைநின்ற பிரிவில் 4 மாணவர்கள்,மாற்றுத்திறன் குழந்தைகள் பிரிவில் ஒரு மாணவி, ஆறு வயது பூர்த்தியான 13 மாணவர்கள்கண்டறிந்து எல்.கே.பி.நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
இதில் ஒருவர் சக்கிமங்கலம் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆய்வில் வட்டார கல்வி அலுவலர் ஜான்சி, தலைமையாசிரியர்தென்னவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

