ADDED : அக் 29, 2025 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கச்சராயிருப்பைச்சேர்ந்த லட்சுமணன் மகன் மணிகண்டன் 36. இவர் அக்.,26ல் உறவினரின் விசேஷத்திற்காக சோழவந்தான்- -- வாடிப்பட்டி ரோட்டில் டூவீலரில் சென்றுள்ளார்.
அப்போது அரசு பஸ் டெப்போ அருகே சாணம்பட்டியைச் சேர்ந்த ராஜாராம் மகன் ஹரிஹர மாதேஷ் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் துாக்கிவீசப்பட்டு காயமடைந்தார். அருகேஇருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அங்கு மணிகண்டன் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்

