sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே

/

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே


ADDED : ஜூலை 01, 2025 02:52 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 02:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தடுப்புகள் எடுக்க வேண்டும்

மதுரை கீழவாசல் அரசமரம் பிள்ளையார் கோயில் முன்பு ரோட்டின் இருபுறமும் தடுப்புகள்வைத்திருப்பதால் வயதானவர்கள், குழந்தைகள் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர். மாநகராட்சி, போக்குவரத்து போலீசார்தடுப்புகளை நீக்க வேண்டும்.

-- சுசீலா, கீழவாசல்

தெருநாய் தொல்லை

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தனியாக செல்வோரை, நாய்கள் கூட்டமாக துரத்தி கடிக்க வருகின்றன. வயதானவர்கள்வெளியே செல்லவே பயப்படுகிறார்கள். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- - பிரதாப் சந்திரன், வில்லாபுரம்

ஆக்கிரமிப்பு கூடாரங்கள்

மதுரை தெப்பக்குளம் -- அண்ணாநகர் பாலத்தின் இருபுறமும், நாடோடி மக்கள் கூடாரங்கள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- -ஏகநாத், வண்டியூர்

திறக்கப்படாத அங்கன்வாடி

மதுரை கோ.புதுார் இந்திரா நகரில் அங்கன்வாடி கட்டி முடிக்கப்பட்டு பல நாட்களாகியும், இன்னும் திறக்கப்படவில்லை. விரைவில் செயல்பாட்டுக்கு வர மாவட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அலெக்ஸாண்டர் அன்புராஜ், புதுார்

அசுத்த நீரால் ஆபத்து

மதுரை தெப்பக்குளம் காமராஜர் சிலை அருகே மாதக்கணக்கில் செப்டிக் டேங்க் அசுத்த நீர் வெளியேறி வருகிறது. அருகிலுள்ள பள்ளிக்கு வரும் மாணவர்கள் இக்கழிவால் சுகாதாரக் கேட்டிற்கு ஆளாகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜெய், தெப்பக்குளம்

ஆக்கிரமிப்பு கடைகள்

மதுரை அய்யர் பங்களா பம்பா நகர் மினிபஸ் நிறுத்தத்தில், மாநகராட்சி எச்சரிக்கை மீறி கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- ஆறுமுகம், உச்சபரம்புமேடு






      Dinamalar
      Follow us