sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே

/

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே


ADDED : ஜூலை 24, 2025 05:41 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாதியில் நிற்கும் பராமரிப்பு பணிகள்

மதுரை எல்லீஸ் நகர் மெயின் ரோடு அருகில் குடிநீர் இணைப்பு பராமரிப்பு பணிகள் ஒரு மாதம் ஆகியும் முடியவில்லை. விரைவில் பணியை முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சூர்யா, எல்லீஸ்நகர்.

பாம்புகளால் ஆபத்து

மங்களகுடி மேற்குபுறம் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பாம்புகள் அடிக்கடி வருகின்றன. குழந்தைகள் இருப்பதால் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

- வெற்றிவேல், மங்களகுடி.

வாய்க்காலின் பரிதாப நிலை

அவனியாபுரம் 5 அடி கால்வாய் தண்ணீரின்றி, புல்வெளியாய் மாறி விட்டது. சில இடங்களில் மரமே முளைத்து விட்டது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாலாஜி, தல்லாகுளம்.

நடுரோட்டில் பள்ளம்

மதுரை கிறிஸ்துவ மிஷன் மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டில் பெரிய பள்ளம் உள்ளது. இரவில் வாகனங்களில் வருவோர் தடுக்கி விழ வாய்ப்பு அதிகம். போர்க்கால அடிப்படையில் தார் ரோடு அமைக்க வேண்டும்.

- - சக்திவேல், கீழவாசல்.

சாக்கடை அடைப்பு

மதுரை புதுார் காந்திபுரம் பாண்டியன் நகர் கடைசி தெருவில் சாக்கடை அடைப்பாக உள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சாக்கடையிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாவதால் குடியிருப்போர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செல்வக்குமார், கோ.புதுார்.

தேவை ஓய்வறை

மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் போதிய ஓய்வறைகள் இல்லாததால் பயணிகள் தரையில் படுக்கின்றனர். நாய்களும் திரிவதால் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- காளீஸ்வரன், சிலைமான்.

விபத்தை ஏற்படுத்தும் ரோடு

மதுரை முடக்குசாலை ரோட்டின் நடுவே உள்ள பள்ளங்களால் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்திற்கு ஆளாகின்றனர். போதிய மின்விளக்குகளும் இல்லை. மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தினேஷ் பாண்டியன், எச்.எம்.எஸ். காலனி.






      Dinamalar
      Follow us