sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே..!

/

ஒரு போன் போதுமே..!

ஒரு போன் போதுமே..!

ஒரு போன் போதுமே..!


ADDED : அக் 21, 2025 03:46 AM

Google News

ADDED : அக் 21, 2025 03:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேங்கும் கழிவுநீர்

மதுரை நடராஜ் நகர் பாண்டியம்மாள் தெருவில் கழிவுநீர் தொடர்ந்து வெளியேறுகிறது. இங்குள்ள விநாயகர் கோயிலைச் சுற்றிலும் கழிவுநீர் தேங்கி இருப்பதால் கோயிலுக்கு செல்ல முடியவில்லை.

- அரவிந்த், கோச்சடை.

இடையூறு குப்பைத்தொட்டி

மதுரை மீனாம்பாள்புரம் செல்லுார் ஓடைப்பாலம் ரோட்டின் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக குப்பைத்தொட்டி உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அபுபக்கர், செல்லுார்.

சகதியில் ரோடு

அவனியாபுரம் காவிரி தெரு ரோட்டில் யாரும் செல்ல முடியாத அளவு பள்ளம் தோண்டி மூடப்படாமல் உள்ளது. மழை நேரம் சேறும், சகதியுமாக ரோடு காட்சியளிக்கிறது. தார் ரோடு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- குமார், அவனியாபுரம்.

சுவாசக்கோளாறு ஆபத்து

மதுரை கிழக்கு ஊராட்சி ராஜாக்கூர் கருப்பசுவாமி கோயில் தெரு பகுதியில் சம்பை புல் அதிகளவில் வளர்ந்துள்ளது. அதன் பூக்கள் உதிர்ந்து வீட்டுக்குள் பரவுவதால் குடியிருப்போருக்கு சுவாசக்கோளாறு வரும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கண்ணன், ராஜாக்கூர்.

கண்டுக்காத அதிகாரிகள்

சோழவந்தான் தென்கரை இணைப்பு பாலத்தில் பள்ளங்கள் உள்ளதால் அவ்வழியே செல்வோர் அடிக்கடி விபத்தை சந்திக்கின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் பயனில்லை. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கவுரிநாதன், சோழவந்தான்.

வழுக்கி விழும் ஆபத்து

பரவை பேரூராட்சி ஊர்மெச்சிக்குளம் அபி கார்டன் தெருவில் ரோடு பள்ளங்களால் நிறைந்துள்ளது. அவ்வழியே வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வீரா, ஊர்மெச்சிக்குளம்.

தெருநாய்கள் தொல்லை

மதுரை கிருஷ்ணாபுரம் சீனிவாசன் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தனியாக செல்வோரை துரத்தி சென்று தாக்குகின்றன. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தமயந்தி, கிருஷ்ணாபுரம்.

துர்நாற்றம் வீசுதே

மதுரை டோக் நகர் 3 வது தெரு நுழையும் இடத்தில் கொட்டும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சத்யராஜ், டோக் நகர்.

வெள்ளக் காடான ரோடு

மதுரை அனுப்பானடி நடுத்தெருவில் இருந்து ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கந்தவடிவேல், அனுப்பானடி.

ஆக்கிரமிப்பு வாகனங்கள்

மதுரை தெப்பகுளத்தில் வார இறுதி நாட்களில் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களால் மக்கள் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- குமார், தெப்பகுளம்.

அச்சுறுத்தும் பள்ளங்கள்

திடீர் நகர் மெயின்ரோட்டில் வாகன ஓட்டிகள் திடீரென வரும் பள்ளங்களால் தடுமாறி விபத்துக்கள் நடக்கின்றன. நெடுஞ்சாலை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வெற்றிவேல், திடீர் நகர்.






      Dinamalar
      Follow us