
தேங்கும் மழைநீர்
மதுரை செல்லுார் காளியம்மன் கோவில் தெருவில் மழைநீர் ரோட்டில் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்கள் பாதிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகேசன், செல்லுார்
குண்டு, குழி ரோடு
மதுரை பசுமலை வசந்தம் கார்டன் பகுதியில் குண்டும், குழியுமாக ரோடு உள்ளது. தெருவிளக்கும் எரிவதில்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உமா, பசுமலை
அள்ளப்படாத குப்பை
மதுரை நியூ எச்.ஐ.ஜி., நகர் காலனியில் நான்கு ஆண்டுகளாக ரோட்டின் குப்பை அள்ளப்படாமல் உள்ளது. பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.  அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரமேஷ், கே.கே.நகர்
சாக்கடை அடைப்பு
மதுரை எல்லீஸ் நகர் கருமாரி அம்மன் கோயில் பகுதியில் அடிக்கடி சாக்கடை அடைப்பு ஏற்பட்டு வீட்டுக்குள் கழிவுநீர் வருகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் அமைத்த குழாய்கள் பழுதடைந்து விட்டன. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பத்மநாபன், எல்லீஸ் நகர்
மோசமான ரோடு
மதுரை முத்துப்பட்டி - அவனியாபுரம் ரோடு பழுதடைந்து மோசமாகி விட்டது. பள்ளி மாணவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆறுமுகம், முத்துப்பட்டி
குடிநீர் பிரச்னை
மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் திருநாவுக்கரசர் தெருவில் குடிநீர் சரிவர வருவதில்லை. எப்போதாவது வரும் நீரிலும் சேறு கலந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பரதன், நேரு நகர்
கழிவறையா, நரகமா
மதுரை மாட்டுத்தாவணி பொதுமக்கள் கழிவறை படுமோசமாக உள்ளது. கழிவறையா இல்லை நரகமா என்றே தெரியாத அளவுக்கு மோசமாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜாராம், பொதிகை நகர்

