ADDED : ஆக 18, 2026 09:57 PM
அ நிறம் | அளவு
மதுரை: உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்தில் இருந்து சுவாமி சதேவானந்த சரஸ்வதி ஆன்லைனில் தமிழில் ஆன்மிக வகுப்புகளை செப்., 4 முதல் நவ., 13 வரை நடத்துகிறார்.
தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பரிசீலனைக்கு பின், முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே வகுப்புகளில் பங்கேற்க முடியும். வாரத்தில் 5 நாட்கள், தலா ஒரு மணிநேர வீதம், தினமும் மூன்று வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். ஜபம், தியானம், தவம், வேத சாஸ்திர ஆராய்ச்சி இவற்றில் ஆர்வம் அவசியம். ஆக., 25க்குள் முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு avg.tamilclass@zohomail.in அல்லது 88659 90846ல் வாட்ஸ்ஆப்பில் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆக.31க்குள் தகவல் தெரிவிக்கப்படும்.
