ADDED : அக் 09, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் பேட்டையில் பொது சுகாதார வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.இங்கு 1வது வார்டில் மத்திய அரசின் 'ஸ்வச் பாரத் மிஷன்- 2.0' 2023-24 திட்ட நிதியில் ரூ.24 இலட்சம் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை கவுன்சிலர் ஈஸ்வரி திறந்து வைத்தார்.
சேர்மன் ஜெயராமன், தி.மு.க., நகரச் செயலாளர் சத்யபிரகாஷ், செயல் அலுவலர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர் ஜெஸ்ஸி, மேற்பார்வையாளர் ராமு, ஒப்பந்ததாரர் பாலாஜி அருண் பங்கேற்றனர்.