/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பட்டாக்களில் வாரிசுகள் பெயர் சேர்க்க வாய்ப்பு
/
பட்டாக்களில் வாரிசுகள் பெயர் சேர்க்க வாய்ப்பு
ADDED : ஜூன் 05, 2025 01:31 AM
மதுரை: தமிழகத்தில் கிராமம், நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நிலஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணைய வழியில் அனைவரும் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் https://eservices.tn.gov.in இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
இருப்பினும் பல சிட்டாவில் உள்ள பட்டாதாரர்களுள், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும், அவர்களின் பெயர்களுக்குப் பதிலாக வாரிசுதாரர்கள் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.
பட்டாவில் உள்ள இறந்த நிலஉடைமை தாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களின் வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ சேவை மையங்கள் மூலமாகவோ, சிட்டிசன் போர்டல் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டு, நிலஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.