ADDED : நவ 24, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிக்குடி: கல்லணையில் பத்துக்கும் மேற்பட்ட குவாரிகள் உள்ள நிலையில், புதிய குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடல்நலம், வீட்டின் கட்டுமானங்கள் பாதிக்கிறது என்றுக்கூறி கல்லணை, அருகில் உள்ள துாம்புக்குளம், டி.புதுார், உலகாணி, சின்ன உலகாணி, அச்சங்குளம், நெடுங்குளம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று கல்லணையில் தொடர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். அரசுக்கு எதிராக போராட உள்ளதாக இக்கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.

