sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வெளியூர் பக்தர்கள் பஜனை, கோஷம்

/

 தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வெளியூர் பக்தர்கள் பஜனை, கோஷம்

 தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வெளியூர் பக்தர்கள் பஜனை, கோஷம்

 தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வெளியூர் பக்தர்கள் பஜனை, கோஷம்

1


UPDATED : டிச 29, 2025 04:40 AM

ADDED : டிச 29, 2025 03:34 AM

Google News

UPDATED : டிச 29, 2025 04:40 AM ADDED : டிச 29, 2025 03:34 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில், மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகில் உள்ள மண்டபத்தில், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.

உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, பல ஆண்டுகளாக ஹிந்து அமைப்பினர், முருக பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தாண்டு, ஹிந்து தமிழர் கட்சித்தலைவர் ராம ரவிக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார். விசாரணைக்கு பின், தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், தீபத்துாணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகே உள்ள மண்டபத்தில் தான், இந்தாண்டு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. நேற்று, கோவை, ஈரோடு, பொள்ளாச்சி உள்ளிட்ட வெளி மாவட்ட பக்தர்கள் மாலை அணிந்து திருப்பரங்குன்றம் வந்தனர்.

கோவில் வாசல் முன் மேளதாளத்துடன் பஜனை பாடி ஆடினர். பின், 'மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் முருகனுக்கு தீபம் ஏற்ற வேண்டும்' என கோஷங்களை எழுப்பினர்.






      Dinamalar
      Follow us