ADDED : ஏப் 14, 2026 11:41 PM

அ நிறம் | அளவு
அலங்காநல்லுார்: கோட்டைமேடு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கிராம மந்தையில் இரு வகுப்பறை கட்டடம் அருகே கிராம மக்கள் பயன்பாட்டுக்காக 15 ஆண்டுகளுக்கு முன் கட்டிய மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி மேல் பகுதி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
தொட்டியின் 4 துாண்களும் விரிசல் விட்டுள்ளன. மேல் பகுதியில் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து விழுகின்றன. கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. தொட்டி அருகே பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் விளையாடுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் ஒன்றிய நிர்வாகம் தொட்டியை பராமரிக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
