sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நெல் கொள்முதல் மையங்களில் 'துாங்கும்' துாற்றும் இயந்திரம்

/

நெல் கொள்முதல் மையங்களில் 'துாங்கும்' துாற்றும் இயந்திரம்

நெல் கொள்முதல் மையங்களில் 'துாங்கும்' துாற்றும் இயந்திரம்

நெல் கொள்முதல் மையங்களில் 'துாங்கும்' துாற்றும் இயந்திரம்


ADDED : மே 15, 2025 02:16 AM

Google News

ADDED : மே 15, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி; வாடிப்பட்டி தாலுகாவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கிராமங்களில் நெல் கொள்முதல் மையங்கள் செயல்படுகின்றன. பல மையங்களில் விவசாயிகளிடமிருந்து பெறும் நெல்லை, துாற்றும் இயந்திரம் மூலம் துாசி அகற்றாமல் மூடை போடுகின்றனர். சில இடங்களில் மையம் நடத்த அனுமதி பெற்றவர் 'சப் கான்ட்ராக்ட்' விடுகிறார். இதனால் விவசாயிகளிடம் மூடைக்கு கட்சியினர் தலையீட்டால் ரூ.50 முதல் ரூ.60 வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

வாடிப்பட்டி நீரேத்தான் மையத்தில் விக்கிரமங்கலம் பகுதி வியாபாரிகள் நெல் அதிகளவில் வாங்குவதாகவும், துாற்றும் இயந்திரம் பயன்படுத்துவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறு விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி சேமித்து வைத்து கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு வியாபாரிகள் விற்கின்றனர். நெல்லை சுத்தம் செய்யாமல் மூடை போடுவதால் சற்று லாபம் கூடும். ஆனால் ரேஷன் அரிசியாக வரும்போது தரமற்றதாக இருக்கும். அரசு மீது புகார்கள் குவியும் என சிறு விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us