/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் கோயிலில் பிப்.10ல் பாலாலயம்
/
திருப்பரங்குன்றம் கோயிலில் பிப்.10ல் பாலாலயம்
ADDED : பிப் 06, 2025 06:10 AM
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலயம் பிப். 10 மதியம் 12:00க்கு மேல் 12:10க்குள் நடக்கிறது.
கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் முடிந்த நிலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களான மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், மலை அடிவாரத்தில் உள்ள பழநி ஆண்டவர் கோயில், பெரிய ரத வீதி அங்காள பரமேஸ்வரி குருநாதர் சுவாமி கோயில், மேல ரத வீதி பாம்பலம்மன் கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
முதல் கட்டமாக சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், கோவர்த்தனாம்பிகை விமானம், விநாயகர் சன்னதி விமானம், வல்லப கணபதி சன்னதி விமானம், பசுபதீஸ்வரர் சன்னதி விமானம் மற்றும் உப கோயில்களுக்கும் பிப். 10 அன்று திருப்பணிகள் துவங்கும் வகையில் பாலாலயம் நடக்கிறது என அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மத்தேவன், சண்முகசுந்தரம், ராமையா தெரிவித்தனர்.