
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி., நகர் ஸ்ரீசக்கர திரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ராஜசிஷியாமளா மகா வாராஹி அம்மன் கோயிலில் ரங்கபஞ்சமி சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.
மூலவர், உற்ஸவர் வராஹிக்கு திரவிய அபிஷேகங்கள், அலங்காரம், பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது. வாராஹி மாலை கூட்டு பிரார்த்தனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

