sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

39 தொகுதிகளிலும் இரட்டை இலை தான் பன்னீர்செல்வம் ஆதரவாளர் அய்யப்பன் 'கலகல'

/

39 தொகுதிகளிலும் இரட்டை இலை தான் பன்னீர்செல்வம் ஆதரவாளர் அய்யப்பன் 'கலகல'

39 தொகுதிகளிலும் இரட்டை இலை தான் பன்னீர்செல்வம் ஆதரவாளர் அய்யப்பன் 'கலகல'

39 தொகுதிகளிலும் இரட்டை இலை தான் பன்னீர்செல்வம் ஆதரவாளர் அய்யப்பன் 'கலகல'


ADDED : மார் 13, 2024 12:21 AM

Google News

ADDED : மார் 13, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி- ''பன்னீர்செல்வத்திற்கு தான் இரட்டை இலை சின்னம் வரும். லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் அணி சார்பில் வேட்பாளர்கள் நிற்க தயாராக இருக்கிறோம்'' என உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் கூறினார்.

உசிலம்பட்டியில் பன்னீர்செல்வம் அணியின் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடந்தது. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் போத்திராஜா பங்கேற்றனர்.

அய்யப்பன் பேசியதாவது: பழனிச்சாமி குரு துரோகி. அவரை முதல்வராக கொண்டு வந்த சசிகலா, தினகரன் உள்ளிட்டோருக்கு துரோகம் செய்துள்ளார். பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்து கொண்டு பலனை அனுபவித்து விட்டு அவர்களையும் கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டார். தற்போது கூட்டணிக்கு யாரும் வராமல் விலகி ஓடுகின்றனர். தேனி லோக்சபா தொகுதியில் பன்னீர்செல்வம் பா.ஜ., கூட்டணியில், இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று பா.ஜ., ஆட்சியில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்று வர உள்ளார் என்றார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''வழக்குகளில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னம் பன்னீர்செல்வம் அணிக்குத் தான் வரும். அவரது தலைமையில் 39 லோக்சபா தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் நிற்பதற்கு தயாராக இருக்கிறோம்'' என்றார்.






      Dinamalar
      Follow us