ADDED : பிப் 23, 2026 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூரிலிருந்து விருதுநகருக்கு 2 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. விருதுநகர்,டிகல்லுப்பட்டி அரசு பஸ் பணிமனையிலிருந்து தலா ஒரு டவுன் பஸ்சும் இயக்கப்படுகின்றன.
இதில் விருதுநகரில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ் சரியான நேரத்திற்கு வந்து செல்கிறது. டி.கல்லுப்பட்டி பணி மனையிலிருந்து இயக்கப்படும் டவுன் பஸ் சரியான நேரத்திற்கு வராததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த டவுன் பஸ் சில நேரங்களில் இயக்கப்படுவதும் இல்லை. இதனால் மாணவர்கள் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். சரியான நேரத்துக்கு பஸ்சை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

