நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் பாசுபத தப யோக கிரியாவை சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார்.
அதர்ம போக்குகள், அசுரத்தனங்கள் அடங்கவும், நோய்கள் விலகவும், தர்மநெறி காக்கவும் நடத்தப்பட்டது. பூமாதேவிக்கு பிரார்த்தனை செய்து ஆதிசங்கரர் அருளிய வேத ஸ்லோகங்கள் தேச அமைதிக்காக பாராயணம் செய்யப்பட்டது. ரத்னேஸ்வரி ஆராதனை செய்தார்.

