ADDED : பிப் 11, 2026 06:42 AM

மதுரை: பத்தாண்டுகளாக உயர்த்தப்படாத இ.பி.எஸ்., ஓய்வூதியத்தை உயர்த்துதல், வயதானவர்களுக்கு ரயில் பயணக்கட்டணத்தில் சலுகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இ.பி.எஸ்., 95 ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் மதுரை இ.பி.எப்., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைமை வகித்த மண்டல செயலாளர் திலகர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 12 ஆயிரம் ஓய்வூதியர்கள் உள்ளனர்.கேரளா, கர்நாடகா, ஆந்திராவில்சமூக நலத்திட்டங்களின் கீழ், ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கேரளாவில் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம், தமிழகத்திலோ ரூ. ஆயிரம் ரூபாய்க்கும் கீழே,ஓய்வூதியம் வாங்குவோர் கணிசமாக உள்ளனர். ஓய்வூதியத்தை உயர்த்துவதோடு,ரயில் பயணக்கட்டணத்தில் சலுகைவழங்க வேண்டும் என்றார்.
சங்க நிர்வாகிகள் விஜயராகவன், அசோகன், லெனின், அரவிந்தன், திருநாவுக்கரசு, பாலமுருகன், சரவணன், கஸ்துாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

