ADDED : ஜூலை 02, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா தலைமையில் நடந்தது.
புதிய வீட்டு வரி, சொத்து வரி திருத்தம், புதிய ரோடு வசதி கோருவது உட்பட 34 மனுக்கள் அளிக்கப்பட்டன. முகாமில் துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி, உதவி கமிஷனர் பிரபாகரன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் காமராஜ், நிர்வாக அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.