ADDED : பிப் 09, 2026 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ஆளுமைத்திறன் பயிற்சி வகுப்பு, முதல்வர் பாண்டியராஜா தலைமையில் நடந்தது.
மாணவி யோக பிரியதர்ஷினி வரவேற்றார். மாணவி கனிஷ்கா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். மேஜர் அருண் நாகேந்திரன் பயிற்சி வழங்கினார். மாணவர் ஹரிஷ் என்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து பேசினார். மாணவர்களுக்கு செயல் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாணவி தாருண்யாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி உட்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவி சாருமதி நன்றி கூறினார். பேராசிரியர் செல்வக்குமார் ஒருங் கிணைத்தார்.

