/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கென தனி பி.டி.ஓ., நியமிக்க வலியுறுத்தல் அரசு செயலரிடம் ஊரக பணியாளர்கள் மனு
/
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கென தனி பி.டி.ஓ., நியமிக்க வலியுறுத்தல் அரசு செயலரிடம் ஊரக பணியாளர்கள் மனு
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கென தனி பி.டி.ஓ., நியமிக்க வலியுறுத்தல் அரசு செயலரிடம் ஊரக பணியாளர்கள் மனு
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கென தனி பி.டி.ஓ., நியமிக்க வலியுறுத்தல் அரசு செயலரிடம் ஊரக பணியாளர்கள் மனு
ADDED : நவ 02, 2024 07:33 AM
மதுரை : தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கென தனி வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் (பி.டி.ஓ.,) உருவாக்க வேண்டும்'' என ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் வலியுறுத்தினர்.
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் தங்கள் துறை சார்ந்த 13 அம்ச கோரிக்கைகளை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். சமீபத்தில் இச்சங்க மாநில தலைவர் சார்லஸ், பொதுச் செயலாளர் ரவி, ஒருங்கிணைப்பாளர் குமரேசன், பொருளாளர் பெரியசாமி முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடியை சந்தித்து மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு சம்பளம் பி.டி.ஓ.,க்கள் மூலம் வழங்க வேண்டும். 10, 20 ஆண்டுகள் பணிமுடித்தவர்களுக்கு முறையே தேர்வு, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். மூன்றாண்டுக்கு ஒருமுறை பணிமாறுதல், ஓய்வூதியம் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஊராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் மேல்நிலைத் தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உதவி இயக்குனர் நிலையில் இருந்து இணை இயக்குனர், பி.டி.ஓ., நிலையில் இருந்து உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும். உதவி, ஒன்றிய பொறியாளர் நிலையில் இருந்து உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீடு அளவு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். ஜல்ஜீவன் திட்ட கணினி உதவியாளர்களுக்கு மீண்டும் பணிவழங்க வேண்டும். கிராம ஊராட்சியில் பணிபுரியும் துாய்மை காவலர்களுக்கும், ஊராட்சிகளில் பணியாற்றும் வி.பி.ஆர்.சி., கணக்காளர்களுக்கும் மாதச்சம்பளம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை, கலெக்டர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகம், ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து கணினி இயக்குனர்களுக்கும் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் வேண்டும்.
மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கென தனியாக வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.