/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கார் மோதி விபத்து போட்டோகிராபர் பலி
/
கார் மோதி விபத்து போட்டோகிராபர் பலி
ADDED : ஜூலை 07, 2025 02:28 AM
திருமங்கலம் : திருமங்கலம் அருகே கார் மோதியதில் டிரைசைக்கிள் ஓட்டிச் சென்ற போட்டோ கிராபர் கலைச்செல்வன் 35, பலியானார்.
திருமங்கலம் கிறிஸ்டியன் காலனியை சேர்ந்த கலைச்செல்வன், காமராஜர்புரம் பகுதியில் ஸ்டுடியோ வைத்துள்ளார். உறவினர் தினேஷ்குமார் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவருக்காக நேற்று முன்தினம் இருவரும் நாகமலை புதுக்கோட்டையில் புதிய டிரை சைக்கிள் வாங்கினர். அங்கிருந்து திருமங்கலத்திற்கு டிரை சைக்கிளை இருவரும் மாற்றி மாற்றி ஓட்டி வந்தனர்.
கப்பலுார் அருகே கலைச்செல்வன் டிரை சைக்கிளை ஓட்டி வந்தார். அவருக்குப் பின்னால் தினேஷ்குமார் டூவீலரில் வந்தார். கோவையில் இருந்து விருதுநகருக்கு மதன்குமார் என்பவர் ஓட்டிச் சென்ற கார் டூ வீலர் மீது மோதி, அதேவேகத்தில் டிரைசைக்கிள் மீதும் மோதியது. பைக்கில் வந்த தினேஷ்குமார் ரோட்டோரம் விழுந்தார்.
கலைச்செல்வன் துாக்கி வீசப்பட்டு தடுப்பில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அதேநேரம் விருதுநகர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற எம்.பி., மாணிக்கம்தாகூர், கலைச்செல்வனை மீட்டு ஆம்புலன்ஸில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின்னர், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று காலை இறந்தார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.