ADDED : நவ 24, 2025 06:10 AM
அ நிறம் | அளவு
மதுரை: உலக சிலம்ப தினத்தை முன்னிட்டு யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 242 வது வார மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். சிலம்ப பயிற்சியாளர் பாண்டி முன்னிலை வகித்தார். கவிஞர் தமிழன்பன் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டன. திருவாதவூர் அரசு மேல்நிலைப் பள்ளி தண்ணாயிர மூர்த்தி, ராகேஷ், விக்னேஸ்வரி, ஐஸ்வர்யா பங்கேற்றனர்.
