ADDED : அக் 23, 2025 03:59 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை ஓம் சாதனா மத்திய பள்ளி 'த லிட்டரரி கிளப்' சார்பில் ஷேக்ஸ்பியரின் 'த டைமிங் ஆப் த ஷேர்' என்ற நகைச்சுவை நாடகத்தை 9ம் வகுப்பு மாணவர்கள் 30 பேர் அரங்கேற்றினர்.
தாளாளர் கண்ணன் துவக்கி வைத்தார். துணைத் தாளாளர் கவின்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ரிதனி, இயக்குனர் நடன குருநாதன், முதல்வர் பரம கல்யாணி முன்னிலை வகித்தனர். தியாகராஜர் கல்லுாரி ஆங்கிலத் துறைத் தலைவர் சுபத்ராதேவி பேசினார். 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையாளர்களாக பங்கேற்றனர். நாடகத்தில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
