sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நாடக மேடையை சீரமையுங்களேன்

/

 நாடக மேடையை சீரமையுங்களேன்

 நாடக மேடையை சீரமையுங்களேன்

 நாடக மேடையை சீரமையுங்களேன்


ADDED : டிச 07, 2025 08:56 AM

Google News

ADDED : டிச 07, 2025 08:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை செல்லுார் மீனாம்பாள்புரத்தில் 14 ஆண்டுகளுக்கு முன் ரூ.5 லட்சம் செலவில் நாடக மேடை அமைக்கப்பட்டது. அதில் அப்பகுதியினர் கூட்டங்கள் நடத்தி வந்தனர். பல ஆண்டுகளாக மின் இணைப்பு, ஷட்டர் இல்லாத நிலையில் இருட்டை பயன்படுத்தி மது அருந்துவது போன்ற செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபடுகின்றனர்.

மேடையில் முகம் சுளிக்கும் அளவுக்கு காலி மது பாட்டில்கள் கிடப்பதால் பொது மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.

கட்டடம் பாழடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேடையின் விளிம்பு சிதைந்த நிலையில் உள்ளது. அதன் வெளிச் சுவரில்பிளக்ஸ், போஸ்டர் ஒட்டி பாழ்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் வழிப்பறி தகராறில் ஒருவரை கொலை செய்த சம்பவமும்மேடையில் அரங்கேறியது.

நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர் கூறுகையில், ''சமூக விரோத செயல்கள் நடப்பதை தவிர்க்க மேடைக்கு மின் இணைப்பு கொடுத்து இரும்பு கேட் அமைத்து சீரமைக்க வேண்டும். மேடையை ஒட்டி செல்லுார் கண்மாய் ஓடை செல்வதால் அதன் சுவரில் நீர்நிலைகள் பற்றிய வரைபடங்கள், விழிப்புணர்வு வாசகத்தை இடம்பெறச் செய்யலாம் என்றார்.






      Dinamalar
      Follow us