ADDED : ஜன 03, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை காமராஜபுரம் சுப்பிரமணியன் 68. சுமை துாக்கும் தொழிலாளி.  இவர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருப்பரங்குன்றம் மகளிர் போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் 2021ல் வழக்கு பதிந்தனர். போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
நீதிபதி முத்துக்குமாரவேல்: சுப்பிரமணியனுக்கு எதிரான குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை (இயற்கை மரணம் அடையும்வரை அனுபவிக்க வேண்டும்), ரூ.6000 அபராதம் விதிக்கப்படுகிறது. சிறுமிக்கு அரசு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

