நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை மணியம்மை நர்சரி பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 'தமிழர் திருநாள் தாரணி போற்றும் பொன்னாள்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் இரா. ரவி வரவேற்றார். பொருளாளர் இரா. கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் இரா. வரதராஜன், துணைச்செயலாளர் கங்காதரன் முன்னிலை வகித்தனர்.
கவிஞர்கள் வீரபாகு, குறளடியான், லிங்கம்மாள், இதயத்துல்லா, அழகையா, அஞ்சூரியா, ஜெயராமன், ஆறுமுகம், ருகபாரதி, அனுராதா, நாகவள்ளி, வனஜா ஆகியோர் கவிதை பாடினர். ஆதிசிவன் நன்றி கூறினார். முன்னாள் கவுன்சிலர் விஜயராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.