sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்திகள்...

/

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...


ADDED : செப் 08, 2025 06:26 AM

Google News

ADDED : செப் 08, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாநாடு சென்ற காங்கிரசார் காயம் திருமங்கலம்: திருநெல்வேலியில் ஓட்டுத் திருட்டு மோசடி குறித்த காங்கிரஸ் கட்சி விளக்க மாநாடு நேற்று நடந்தது. இதில் பங்கேற்க கடலுார் மாவட்டத்தில் இருந்து நகர தலைவர் வேல்முருகன் தலைமையில் 12 நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு வேனில் திருநெல்வேலி கிளம்பினர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சமத்துவபுரம் அருகே சென்ற போது துாக்க கலக்கத்தில் இருந்த வேன் டிரைவர் மாரிமுத்து, திண்டுக்கல்லில் இருந்து சிவகாசிக்கு லோடு ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் மோதினார்.

இதில் காங்., கட்சி நிர்வாகிகள் வேல்முருகன், செல்வானந்த், ராவணன், டிரைவர் மாரிமுத்து காயமடைந்தனர். காயமடைந்தவர்களை திருமங்கலம் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கார் மோதி ஒருவர் பலி பேரையூர்: சிலார்பட்டியைச் சேர்ந்தவர் தங்கையா 65. இவர் மதுரை-ராஜபாளையம் ரோட்டில் ஏ.பாரப்பட்டி கண்மாய் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் சென்ற கார் மோதியதில் இறந்தார். காரை ஓட்டி வந்த பொள்ளாச்சி சக்திவேலிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆடு திருடிய இருவர் கைது வாடிப்பட்டி: குட்லாடம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்த விவசாயி சேவுகப் பெருமாள் 28, இவர் வளர்க்கும் ஆடுகளை நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே தொழுவத்தில் அடைத்து சென்றார். நள்ளிரவு 2:00 மணிக்கு நாய் குறைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது டூவீலரில் இருவர் ஆட்டுக்குட்டியை திருடிச் சென்றனர். வாடிப்பட்டி போலீசார் விசாரித்து ஆடு திருடிய அதேபகுதி மனோஜ் குமார், கச்சைகட்டி ஸ்ரீரங்கன் ஆகியோரை கைது செய்தனர். ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வழக்கறிஞர் கொலை: 3 பேர் கைது மதுரை: வண்டியூர் பாலாஜி நகரை சேர்ந்த வழக்கறிஞர் பகலவன் 40. செப். 4-ல் நடைப்பயிற்சி சென்றபோது கல்மேடு மணிமாறன் 37, அருண்பாண்டி33, முனிச்சாலை ராம்குமார் 28, ஆகியோர் அவரிடம் தகராறு செய்தனர். அவரை கம்பு, கல்லால் தாக்கி தப்பினர். காயமடைந்த பகலவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி சியாமளா புகாரில் அண்ணாநகர் போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பகலவன் உயிரிழந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

பாரில் மூவருக்கு கத்திக் குத்து மதுரை: குருவிக்காரன் சாலையில் உள்ள தனியார் மதுபானபாரில் குடிபோதையில் இருந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மது பாட்டில், கத்தியால் குத்தியதில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசை கண்டதும் பாரில் இருந்தவர்கள் வைகை ஆற்றுக்குள் குதித்து தப்பினர். அவர்களை போலீசார் விரட்டி 10க்கும் மேற்பட்டோரை பிடித்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது.

மாணவி தற்கொலை மதுரை: சிந்தாமணி அழகர்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் முருகன் - ராமலட்சுமி. இவர்களின் 14 வயது மகள் அப்பகுதி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். நேற்றுமுன்தினம் காலை அவரை படுக்கையில் இருந்து பெற்றோர் எழுப்பினர். மயங்கிய நிலையில் அவர் கிடந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் இறந்திருந்தது தெரிந்தது.

கீரைத்துறை போலீசார் விசாரித்தபோது, அதிக எண்ணிக்கையில் அவர் மாத்திரை சாப்பிட்டதும், காதல் தோல்வியடைந்து விட்டதாக அவர் எழுதி வைத்திருந்ததும் தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us