
பந்தை எடுத்தபோது பலி மதுரை: பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் அஜிஷ்சேட் 27. லோடுமேனாக இருந்தார். வீட்டருகே குழந்தை ஒன்று விளையாடிய பந்து மின்ஒயரில் விழுந்தது. அதை ஒட்டடை எடுக்கும் கம்பியால் அஜிஷ்சேட் எடுத்து கொடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.
முதியவர் பலி மேலுார்: அம்மன் கோவில் பட்டி அழகு 80. நேற்று முன்தினம் இரவு பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற போது திருப்பத்துார் - மதுரை சென்ற வேன் மோதி இறந்தார். கீழவளவு எஸ்.ஐ., அசோக்குமார் விசாரிக்கிறார்.
டூவீலர் மோதி மாணவர் பலி உசிலம்பட்டி: மருதம்பட்டி சிவஞானகண்ணன் மகன் பாண்டிச்செல்வம் 16. பூச்சிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். நேற்று காலை மதுரை - தேனி ரோட்டை கடக்க முயன்ற போது, தேனியில் இருந்து உசிலம்பட்டி வந்த டூவீலர் மோதியதில் பலியானார். டூவீலரில் வந்தவர் தப்பிச் சென்றார். உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.