/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த போலீஸ்காரர் உடல் தகன ம்
/
மதுரையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த போலீஸ்காரர் உடல் தகன ம்
மதுரையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த போலீஸ்காரர் உடல் தகன ம்
மதுரையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த போலீஸ்காரர் உடல் தகன ம்
ADDED : மார் 21, 2025 04:06 AM

மதுரை : மதுரையில் மனைவி இறந்த நிலையில் கணவரான போலீஸ்காரர் மலையரசன் 36, உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு நேற்று போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அம்மாவும் இறந்த நிலையில் அப்பாவும் இறந்ததால் அவரது உடலை பார்த்து 'அப்பா வாங்கப்பா...' என 8, 10 வயது மகன்கள் கதறி அழுதது பார்ப்போரை கலங்க செய்தது.
விருதுநகர் மாவட்டம் முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மலையரசன். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தனிப்படை காவலர். இவரது மனைவி பாண்டிச்செல்வி 33. இரு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு டூவீலரில் மனைவியுடன் மலையரசன் திரும்பியபோது மானாமதுரை அருகே வாகனம் ஒன்று மோதியதில் பாண்டிச்செல்வி இறந்தார். விடுமுறையில் இருந்த மலையரசன், மார்ச் 18 ல் மதுரை ரிங் ரோடு ஈச்சனோடை பகுதியில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடக்கிறது.
அடுத்தடுத்து மனைவி, கணவன் இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறி நேற்றுமுன்தினம் மதுரை அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் சமரசத்தை தொடர்ந்து நேற்று காலை மலையரசன் உடலை பெற்று தத்தனேரி மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது 8,10 வயது மகன்கள் 'அப்பா...அப்பா... எந்திரிச்சு வாங்கப்பா...' என கதறி அழுதது பார்ப்போரையும் அழ வைத்தது.