sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மத நல்லிணக்க பொங்கல் விழா

/

மத நல்லிணக்க பொங்கல் விழா

மத நல்லிணக்க பொங்கல் விழா

மத நல்லிணக்க பொங்கல் விழா


ADDED : ஜன 16, 2025 05:19 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தும்பைப்பட்டி வீரகாளியம்மன் கோயிலில் ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள் இணைந்து மத நல்லிணக்க பொங்கல் விழாவாக கொண்டாடினர்.

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு புதிய ஜவுளிகள் வாங்க கிராமத்து சார்பில் பணம் வசூலிக்கப்பட்டு, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த தரகன் வகையறாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு புதிதாக வாங்கிய ஜவுளிகளை, கிராமத்து பெரியவர்கள் முன்னிலையில் பெரிய மந்தை திடலில் வைத்து அனைவரும் சாமி கும்பிட்டனர்.

தரகன் வகையறாவைச் சேர்ந்தவர், கிராமத்தினர் புதிய ஜவுளிகளை தலையில் சுமந்தவாறு வீரகாளியம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு புதிய ஜவுளிகளுக்கு தீபாராதனை காண்பித்து, அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் நடந்தது.

பின்னர் கோயில் மாட்டுக்கு அணிவித்து மஞ்சுவிரட்டு நடந்தது. முன்னதாக கோயிலில் மத நல்லிணக்க பொங்கல் வைத்து ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து வழிபட்டனர். ஜாதி, மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஆண்டுதோறும் இந்தமத நல்லிணக்க பொங்கல் விழாவைக் கொண்டாடுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர். இதில் தும்பைப்பட்டி கிராமத்தினர் அனைவரும் ஒற்றுமையாக பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us