சோழவந்தான்: சோழவந்தான் தெற்கு ரதவீதி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் பரிசளிப்பு விழா நடந்தது.
தலைவர் அன்பு தலைமை வகித்தார். செயலாளர் பாலு, பொருளாளர் கார்த்திக் வரவேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ், வேணுகோபால் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினர். துணைத் தலைவர் சிவா நன்றி கூறினார். துணைச் செயலாளர் விஜயகோபால், இணைச் செயலாளர்கள் கரந்தேஸ்வரன், ஜீவானந்தம், நிர்வாகிகள் தமிழரசன், சரவணமுத்து, பார்த்திபன் பங்கேற்றனர்.
* மேலரதவீதி இளைஞர் நற்பணிமன்றம் சார்பில் நடந்த விழாவுக்கு தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஜீவா,ராஜா, வழக்கறிஞர் தியாகராஜன் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினர். மன்ற பொருளாளர் தினேஷ், விழாக்குழுத் தலைவர் தன்ராஜ் நன்றிகூறினர். நிர்வாகிகள் ராஜன்,பாண்டி, சுரேஷ்,செந்தில், ராஜா பங்கேற்றனர்.

