ADDED : பிப் 15, 2026 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஆபர் தொண்டு நிறுவனம், எச்.சி.எல்.,பவுண்டேசன் சார்பில் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 24 பள்ளிகளில் குழந்தைகள் பார்லிமென்ட், தனித்திறன் வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. ஆபர் நிறுவன திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன் பேசினார்.
திட்ட செயல்பாடு, படிப்பைவிட்டு இடைநின்ற மாணவர்களை சந்தித்து, மீண்டும் கல்வியை தொடர செய்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. எச்.சி.எல்.,பவுண்டேசன் திட்ட அலுவலர் ராஜலட்சுமி, மாணவர் ஆலோசகர் எலியாஸ் பங்கேற்றனர்.

