நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் அருகே தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் ஞானமணி 48. கடலுார் மத்திய சிறையில் வார்டனாக இருந்தார். இவரது மனைவி சுகப்பிரியா 43, தனியார் பள்ளி ஆசிரியை. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ஞானமணி சில நாட்களாக உடல்நலமின்றி வீட்டில் இருந்துள்ளார். கடந்த பிப். 6ல் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். பேரையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

