sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சொத்து வரி விதிப்பு முறைகேடு: ஜாமின் மனு ஒத்திவைப்பு

/

சொத்து வரி விதிப்பு முறைகேடு: ஜாமின் மனு ஒத்திவைப்பு

சொத்து வரி விதிப்பு முறைகேடு: ஜாமின் மனு ஒத்திவைப்பு

சொத்து வரி விதிப்பு முறைகேடு: ஜாமின் மனு ஒத்திவைப்பு


ADDED : ஜூலை 12, 2025 03:59 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு தொடர்பாக கைதானவர்களில் 5 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணையை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மதுரை மாநகராட்சி கமிஷனராக தினேஷ்குமார் இருந்தபோது வரி வசூல் தொடர்பாக ஆய்வு நடத்தினார். 2022 மற்றும் 2023 ல் விதிகளை மீறி வரியை குறைத்து நிர்ணயித்து ரூ.150 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. முறைகேடு குறித்து மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரங்கராஜன், ஒப்பந்த ஊழியர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன், இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ் குமார், முகமது நுார் கைது செய்யப்பட்டனர்.

கைதான ஷாகா உசேன், ராஜேஷ் குமார், முகமது நுார், சதீஷ், ரங்கராஜன் ஜாமின் அனுமதிக்கக் கோரி மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

நீதிபதி சிவகடாட்சம் விசாரித்தார். தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி, 'வழக்கு ஆவணங்களை பரிசீலிக்க அவகாசம் தேவை,' என்றார். நீதிபதி ஜூலை 15க்கு ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us