ADDED : டிச 11, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது.
மண்டல தலைவர் வாசுகி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரித்திருத்தம், பாதாளச் சாக்கடை இணைப்பு வசதி, காலி மனை வரி விதிப்பு, சுகாதாரம், ஆக்கிரமிப்பு அகற்ற கோருவது தொடர்பாக 65 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உதவி கமிஷனர், அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டது.
துணைமேயர் நாகராஜன், உதவி கமிஷனர் பார்த்தசாரதி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், நிர்வாக அலுவலர் மணியன், நகர்நல அலுவலர் இந்திரா, செயற் பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், உதவி வருவாய் அலுவலர் லோகநாதன், கண்காணிப்பாளர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

