ADDED : பிப் 07, 2025 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : செம்பூரில் 89 ஏக்கரில் மத்திய சிறைச்சாலை அமைய உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், சிறை அமைந்தால் தெற்கு தெரு, மாணிக்கம்பட்டி உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம், கால்நடை மேய்ச்சல் பகுதி மற்றும் இப்பகுதியில் வசிக்கும் வன உயிரினங்கள் பாதிக்கப்படும்.
அதனால் மத்திய சிறையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என ஏற்கனவே கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்காவிடில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

